Tuesday 17 July 2012

போகப் போகத் தெரியும் - 17



        தொட்டவுடன் உதிர்ந்துவிடும் சிவந்த சின்ன சின்ன இதழ்கள்! இருந்தாலும் கூட்டாகச் சேர்ந்து கட்டி அணைத்து வெள்ளிக் கம்பிச் சிறைக்குள்ளே மூச்சுவிடவும் முடியாமல் அடைபட்டுக் கிடக்கும் ரோஜாப்ப+ கூட்டங்கள்..  மாலையாக இருப்பது ஒன்றும் பெரியதல்ல. யார் கழுத்தில் மாலையாகப் போகிறோமோ... என்று காத்து கொண்டிருப்பது போல் தோன்றியது மீனாவிற்கு!
   அவளும் தான் அங்கே மக்களோடு மக்களாக ஊர் பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு காத்திருந்தாள். அங்கே உள்ளூர்காரர்களைவிட திருவிழாவிற்காக வந்திருந்த வெளியூர்காரர்கள் தான் அதிகம். அதில் நிறைய பேர் சிறுசிறு வியாபாரிகள்!
   நிறையக் கடைகள் குடை ராட்டினம் பெரிய சுற்றுராட்டினம் என்று நிறைய பொழுது போக்குச் சாதனங்கள் இருந்தன. இதே வேறு நாளாக இருந்தால் மீனா அதில் விளையாடிக் கொண்டிருப்பாள். ஆனால் இன்று.?
   மாதத்தில் அந்த ஐந்து நாட்களில் இன்று முதல் நாள்! நிச்சயமாக அவள் எங்கேயும் போக முடியாது. அவ்வளவு வயிற்றுவலி இருக்கும். இன்றும் அதே நிலைத்தான்! ஆனால் ;சக்திவேல் ஜெயித்துவிட்டார். இதோ வந்து கொண்டிருக்கிறார்.... ; என்று ஒலிப் பெருக்கியில் தெருவுக்குத் தெரு சத்தமாகச் சொல்லிக் கொண்டே போனதைக் கேட்டதும் வலியைப் பொறுக்காமல் எழுந்து வந்துவிட்டாள்.
   ப+க்கடைக்காரரிடம் மாலைக்குப் பணம் கொடுத்துவிட்டு அவர் கடையின் ஓரத்திலேயே உட்கார்ந்து விட்டாள்.
   ஒரு சிறுமி அவளிடம் ஓடி வந்தாள்!
   'அக்கா... அக்கா... அந்த சர்பத் கடைக்கி பக்கத்துல இருக்கற கடையில ஒருத்தர் உன்னைக் கூட்டிகினு வரச் சொன்னார்." இவளின் கையைப்பிடித்து இழுத்தாள்.
   மீனா யோசனையுடன் அவள் சுட்டிக்காட்டின இடத்தைப் பார்த்தாள். அவள் இருக்கும் இடத்திற்கும் அந்த சிறுமி சொன்ன இடத்திற்கும் நடுவில் ஒரு யானை! அது தலையை நீட்டுபவர்களிடம் சில்லரையை வாங்கிக் கொண்டு ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தது.
  அவளுக்கு யானை என்றாலே பயம்! அதிலும் இப்படியான நேரத்தில் பெண்கள் எந்த விலங்கையும் தொடக்கூடப் பயப்படுவார்கள்! அதிலும் யானை தெய்வீகத்தன்மை வாய்ந்தது. அதனைத் தாண்டிப் போவதா....? முடியாது.
   'பாப்பா.... அங்க யான இருக்குது. எனக்கு யானன்னா பயம். நான் வரலைன்னு போய்ச் சொல்லு. வேணும்மின்னா அவர இங்க வரச்சொல்லு." என்றாள்.
   சிறுமி போய்விட்டாள். ஆனால் சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தாள். 'அக்கா.... யானைய அனுப்பியாச்சாம். உன்ன ஒடனே வரச்சொன்னார்." என்றாள் அவள்.
   மீனா திரும்பி யானை இருந்த இடத்தை நோக்கினாள். யானை அங்கே இல்லை!! அவளுக்காக யானையையே அப்பறப்படுத்திவிட்டு கூப்பிடுபவர் யாராக இருக்கும்.....? யோசனையுடன் அங்கே சென்றாள்.
   சர்பத் கடைக்குப் பக்கத்தில் புதியதாகத் திருவிழாவிற்காகப் போடப்பட்ட கொட்டகை. அது தண்ணீரப்; பந்தலாக இருந்திருக்க வேண்டும். பெரிய பெரிய அண்டாக்களும் ப்ளாஸ்டிக் டம்ளர்களும் காலியாக இருந்தன. உள்ளே சென்றாள். அங்கே ஓலையால் செய்த ஒரு தடுப்பு!
   மெதுவாக அங்கே நுழைந்த பொழுது சட்டென்று ஒரு கை அவளைப்பிடித்து உள்ளுக்குள் இழுத்தது. அதிர்ச்சியுடன் இழுத்தவனின் மேல் விழுந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்ததும் நடுங்கிவிட்டாள்! வேந்தன்!!!
   அதிர்ச்சியில் அசையாது நின்றுவிட்டாள். அவன் இவளின் விரித்திருந்த கூந்தலைக் கொத்தாகப் பிடித்தான்.
   'ஏன்டி...... நா எவ்ளோ கஷ்டபட்டு ப்ளேன் பண்ணி அந்த ஆறுபேரையும் கவுக்கலாம்ன்னு நெனச்சி இருந்தேன்..... நீ ர். சியா.... போலிசுக்குப் போன் போட்டுசொல்லிட்டியா....? ஒனக்கு எவ்ளோ திமுரு இருக்கும்? அனாத நாயே....."
   ;பளார் ; என்று கன்னத்தில் அறைந்தான். அவளின் கண்கள் கலங்கிவிட்டன. பயம் நெஞ்சை அழுத்தியது. பேச்சு வரவில்லை.
   'ஏய்.... மொதோமொதோ உன்ன பாத்தேனே... அன்னைக்கே உன்ன ஒரு வழி பண்ணி இருக்கணும்.... அப்போ தெரிஞ்சிறுக்கும் இந்த வேந்தன் யார்ன்னு. அப்போ என்ன...? இப்போ காட்டுறன். நா யாருன்னு...."
   சொல்லிக்கொண்டே அவளின் மாராப்பைப் பிடித்து இழுத்தான். அவன் இழுத்த இழுப்பில் ஜாக்கெட்டுடன் சேர்த்துக் குத்தியிருந்த ;ஊக்கை ; யையும் பிய்த்துக் கொண்டு தாவணையின் முந்தானை அவன் கையில் வந்து விட்டது.
   மீனா மார்பைக் கைகளால் குறுக்காக மூடிக்கொண்டாள். ஊக்கு தோள்பட்டையில் அழுத்தமாகக் கீறிவிட்டதால் அவ்விடம்;;;;; எறிந்தது. ஜாக்கெட்டும் கிழிந்து தொங்கியது. அவன் வெறிபிடித்தவன் போல் அவளைக் கட்டியணைக்க வந்தான். மீனா ஒரே விநாடி யோசித்தாள். கோபம் தலைக்கேறியது.
   'டேய்.... நீயெல்லாம் ஆம்பளையா....? சீ;;;.... என்ன கற்பழிச்சிட்டா மட்டும் நீ அம்பள ஆயிடுவியா.... தூ.... " கோபமாகக் துப்பினாள்.
   அவன் இவளைப் பார்த்துப் பற்களைக் கடித்துகொண்டு 'என்னடி சொன்னே....." அவளின் இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி அறைந்தான். மீனா கல்லாக நின்றாள். அவனைப்பார்த்து முறைத்தாள்.
   'தாலிகட்டின தன்னோட பொண்டாட்டிய தொடுறவன் தான் உண்மையான ஆம்பளை! என்ன நீ இப்போ நாசம் பண்ணாலும் நீ எனக்குப் பேடித்தான்! உன்னோட பேடித்தனத்த தீட்டோட இருக்கறவ கிட்டக் காட்டி மேலும் அசிங்கப்படாதே...." அழுத்தமாக ஒருவிரலைக் காட்டிச் சொன்னாள்.
   'தாலி தானே கட்டணும்? கட்டிக்காட்டுறேன். எவ்ளோ எதிப்பு வந்தாலும் ஒனக்கு தாலி கட்டி நா ஆம்பளன்னு நிறுபிக்கிறேன். ஏய் மீனா..... உன்ன நா விடமாட்டேன்டீ....."
   கோபமாகக் கத்தினான். அதற்குள் எல்லாவத்தியங்களும் முழங்க ஆரம்பித்தது. அனேகமாக சக்திவேல் அங்கே வந்துவிட்டிருப்பான்! அதனால் தான் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் என்று அனைத்து ஆட்டங்களின் வாத்திய சத்தங்களும் ஒன்றாக ஒலித்தது.
   'வக்கிறேன்டி ஒனக்கு வேட்டு....." கோபமாகச் சொல்லிக் கொண்டே அவளைப் பிடித்து தள்ளிவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினான் அவன்.
   அவளுக்கு இப்பொழுதுத்தான் போன மூச்சுத் திரும்பிவந்தது போல் இருந்தது. அதுவும் நிரந்தரமில்லை என்று நினைக்கத் தோன்றியது. கண்களைத் துடைத்துக் கொண்டு தலைமுடியையும் உடையையும் சரிசெய்து கொண்டு ப+க்கடையின் அருகில் வந்து உட்கார்ந்து விட்டாள்.
   அங்கிருந்த கூட்டம் குறைந்திருந்தது. அனேகமாகச் சக்திவேலுவை பார்க்கப் போய் இருப்பார்கள்.
   ஆனால் அவள் போகவில்லை. அதற்கு அவளது மனமும் உடலும் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் சக்திவேலுவைப் பார்க்க மனம் ஆவல் கொண்டது.
   வாத்திய ஓசை மிக அருகில் கேக்கவும் மாலையைக் கையில் வாங்கிக் கொண்டு அவன் வரும் வழிய நோக்கி நடந்தாள்.
   நெருக்கமாக இருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவளால் செல்ல இயலவில்லை. எல்லோரும் வெளியூர்காரர்கள் வேறு! பேசாமல் ஓர் இடத்தில் நின்றுவிட்டாள்.
   சக்திவேல் கழுத்துநிறைந்த மாலைகளுடன் வண்டியை விட்டிறங்கி நடந்து வந்தான். அவன் வரும்; வழியெல்லாம் மாலைகள் போடப்பட்டன. அவன் கண்களோ மீனாiவுத் தேடின!!
   யாரோ ஒருவர் மீனா இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்ட அவன் தன் தோழர்களுடன் அவளருகில் வந்தான்!
   மீனா அதிர்ச்சியாக அவனைப்; பார்த்தாள். அவளுக்குக் கோபம் தலைக்கேறியது. ஏற்கனவே வேந்தனிடம் பட்ட அவமானம்! இப்பொழுது இவன் வேறு வெற்றியுடன் வந்திருக்கிறான்!
   தான் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று சொல்லியும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறான்.....!
   அப்போ சக்திவேல் எங்க....? சக்திவேல் தானே போட்டியில ஜெயிச்சதா அறிவிச்சாங்க.....? இவனுக்கு ஏன் மாலை மரியாதை எல்லாம்....?
   அவர் எங்கே.....? இவனை விடுத்து அவள் கண்கள் மற்ற இடங்களைத் தேடியது.
   'யாரத்தேடுற மீனா....?" சேகர் கேட்டான்.
   'சக்திவேலத்தான்." அவள் மெதுவாக சொல்ல...
   'என்ன மீனா? இன்னுமா ஒனக்கு தெரியல... இவருத்தான் சக்திவேல்."
   சேகர் சிரிப்புமாறாமல் சொல்ல மீனா அதிர்ச்சியுடன் சின்னதம்பியை நோக்கினாள். அவன் சிரித்துக் கொண்டே இவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
   'மீனா... மாலைய போடு. சக்திவேலுவும் இவர் தான். உன்னோட சின்னதம்பியும் இவர்தான். ம்... மாலையபோடு....."
   கூட்டத்தில் யாரோ ஒருவர் குரல் கொடுக்க மீனா குழப்பத்துடனே மாலையை இருகைகளாலும் தூக்கினாள்
   அவன்மட்டும் தலையைச் சற்றுக் குனிந்து காட்டியிருந்தால் நிச்சயம் அவன் கழுத்திலேயே மாலையைப் போட்டிருப்பாள்.
   ஆனால்....
   அவன் அந்த மாலையை சிரித்து கொண்டே கழுத்தில் விழாதவாறு கையால் வாங்கிக் கொண்டான்!
   அவளுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி! அப்படியானால் தான் மாலைப் போடுவதை விரும்பவில்லையா....?
   சந்தேகத்துடன் முறைத்தவளை யாரோ தோள்பட்டையில் தன்னை தீண்டி அழைக்கவும் யார் என்று பார்க்கத் திரும்பினாள்.
   தன்னைத் தீண்டியது ஒரு பெரிய யானையின் துதிக்கை தான் என்பதை உணர்ந்ததும் யானையைத் தன் மிக அருகில் கண்டதும்..... தன்னை மறந்து வாயில் கைவைத்து ;வீர் ;என்று கத்தியபடி மயங்கி சரிந்து விழுந்தாள்!
'யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோடு தான் ஆட....." என்று திருவிழா ஒலிப்பெருக்கியில் மிதந்து வந்த பாடலை ரசித்தபடி மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள் மீனா.
   அன்று யானையைப் பார்த்து மயங்கி விழுந்த பிறகு கண்விழித்த போது தன் வீட்டில் படுத்திருந்தாள். 'சக்திவேல் தம்பிதான் உன்னைத் தூக்கிணு வந்து கெடத்தினார்" என்று அறிவழகி சொன்னபோது முகமும் மனமும் வெட்கத்தால் சிவந்தது.
   ஆனாலும் அவன் மாலையைக் கையில் வாங்கிக் கொண்டது அவளுக்குத் தான் எதையோ இழந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றியது. அது எதுவென்று தான் தெரியவில்லை.
   தான் முதன்முதலில் அவனைச் சந்தித்தது முதல் இன்று வரையிலும் நடந்த அனைத்தையுமே ஒன்றன் பின் ஒன்றாக நினைத்துப் பார்த்தாள். எல்லாவற்றிலுமே தான் சக்திவேல் விசயத்தில் ஏமார்ந்து இருந்ததை நினைத்து வெட்கப்பட்டாள்.
   அவள் ஏமார்ந்தது ஒரு குற்றமில்லை! தன்னை அனைவருமே ஆதாவது சக்திவேல் ஆறு நண்பர்கள் கணேசன் கமலா ருக்மணி என்று எல்லோருமே தன்னிடம் நன்றாகப் பழகியும் சின்னதம்பி தான் சக்திவேல் என்று சொல்லவே இல்லையே!!!
   அவர்கள் பெரியவர்கள்!! ஆனால் இந்த ஊர் சின்னப் பிள்ளைகள்....? அவர்கள்கூட அவளிடம் உண்மையைச் சொல்லவில்லையே.....!!
   சரி இவர்கள் அனைவருமே இந்த ஊர்காரர்கள்! ஆனால் அந்த வெற்றிவேல்....? அவன் இவர்களுக்கு விரோதித் தானே.....! அவனாவது அன்று சொல்லியிருக்கலாமே.... அவன் கூடச் சொல்லவில்லையே.....
   முதன்முதலில் இந்தப் பிரட்சனை யாரால் வந்தது? சரியாக யோசித்துப் பார்த்தால்... அது அந்த தத்துவஞானி கணேசன் தான். அவன் சக்திவேலுவை ஒர் உருவகப்படத்திச் சொல்லியிருக்கவில்லை என்றால்.....இவள் எப்பொழுதோ உண்மையை உணர்ந்திருப்பாள்! எல்லாவற்றிர்க்;கும் காரணம் அந்தக் கணேசன் தான்!
   சரி. அவன்தான் அப்படிச் சொன்னான் என்றாலும் நம்புத்தி எங்கே போனது...? ஆழ்ந்து சிந்தித்திருக்க வேண்டாம்.....? இப்பொழுது இப்படி ஏமார்ந்து இருக்கிறோமே....!
   தானே தன் தலையில் தட்டிக்கொண்டாள். அப்படிச் செய்தவளை ஆச்சரியமாகப் பார்த்த அறிவழகியிடம் 'ஏம்மா.... நீயாவது சொல்லியிருக்கக் கூடாது.... சின்னதம்பி தான் சக்திவேல்ன்னுட்டு....." கோபமாக கேட்டாள்.
   'என்னது சின்னதம்பியா...? யாரு அது.....?" அவள் மகளையே திருப்பி கேள்விக்கேட்டாள்.
   அவளுக்கு எல்லாம் நன்றாகப் புரிந்து விட்டது. எல்லோருமே சேர்ந்து தான் தன்னை முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்று!
இனி என்ன செய்ய முடியும்? பேசாமல் தன் ஏமாற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டியது தான்! தானே இதை ஒப்புக் கொண்டால் அவமானத்திலிருந்து தப்பிக்கலாம்! வேறவழி?
   இதோ இரண்டு நாட்களாக வெளியே போகவில்லை. அதற்கு மூன்று காரணங்கள்!
   ஒன்று வெளியே போனால் நிச்சயமாக சின்னதம்பி இல்லையில்லை. இனி அவனை இப்படிச் சொல்லி அழைக்கக்கூடாது. சக்திவேல்! இனி இப்படிதான் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்.
     வெளியே போனால் நிச்சயம் சக்திவேலுவைப் பார்க்கவேண்டி வரும். அவன் நிச்சயம் தன்னைக் கேலி செய்வான். தான் கேட்ட பரிசைத் தரச் சொல்லிக் கேட்பான்.  இப்படி நினைக்க அவள் கன்னங்கள் சிவந்தன!
   அடுத்தது. அந்த மனித மிருகம் அந்த வேந்தன்! எப்படியாவது அவளுக்குத் தாலி கட்டுகிறேன் என்று சவால்விட்டு இருக்கிறான். அவனை நினைக்க.. அவள் கண்கள் கோபத்தால் சிவந்தன.
   மற்றது! அந்த யானை! அதன் பயம் இன்னும் அவள் நெஞ்சத்தை விட்டு நீங்கவில்லை!
   பிறகு எப்படி போவாள்..? அறிவழகியும் வெளியே போய் வா.. என்று மகளைச் சொல்லியும் இவள் உடம்பு சரியில்லை. கண் எறிகிறது. வயிற்று வலி. என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டு வீட்டிலேயே இருந்தாள்.
   நாளை காலையில் தேர் ஊர்வலம்! கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்தத் தேர்! நாளை ஊர்வலமாக வரப்போகிறது. அதைக் கூடப் பார்க்கவேண்டும் என்று மீனா எண்ணவில்லை.
   அவள் நினைத்திருந்தால் வேந்தனைப் பற்றி சக்திவேலிவிடம் சொல்லியிருக்கலாம்! ஆனால் ஊரில் திருவிழா நேரம்! இப்பொழுது இதைச் சொல்லப்போய் வேறு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால்..?
   வேண்டாம். வேந்தனும் சாதாரண ஆள் இல்லை. அன்று மருத்துவமனைக்கு அடியாட்களுடன் வந்த விதமே தெரிந்தது. அவனைச் சுற்றியும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்று!
   அதிலும் அவ்வளவு பெரிய மாட்டுவண்டி போட்டியில் மாடுகளுக்கு ஊசி மருந்து போடுவது என்றால் சாதாரண விசயமா..? அன்று அவள் யானைக்குப் பயப்படுகிறாள் என்றதும் சற்று நேரத்திற்குள் யானையை அனுப்பிவிட்டானே..! அவன் சொல்லுக்கும் இங்கே மதிப்புக் கட்டுப்பாடு இருக்கிறதே..!
   அவன் அவளிடம் நடந்து கொண்ட முறையைச் சொன்னால் நிச்சயம் ஏதாவது பிரச்சனை வரும். இப்பொழுது வேண்டாம். திருவிழா முடியட்டும். பிறகு அவனால் ஏதாவது பிரட்சனை வந்தால் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தாள்.
   ஆனால் திருவிழாவிலேயே பிரட்சனை வரும் என்று அவளுக்கு அப்பொழுது தெரியாது.
   பிரச்சனை என்று ஒன்றை நாம் அனுபவிக்கும் வரை நாம் நம்முடைய துணிவைத்தானே நம்பியிருக்க வேண்டும்.


                             (தொடரும்)

5 comments :

  1. சுவாரஸ்யமாக செல்கிறது...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க
      தனபாலன் ஐயா.

      Delete
  2. Replies
    1. தங்களின் வருகைக்கு
      மிக்க நன்றிங்க பாரதி.

      Delete
  3. விறுவிறுப்பினைக் கூட்டிக்கொண்டே செல்கின்றீர்கள்...

    ReplyDelete