Tuesday 18 September 2012

முன் கதைச் சுறுக்கம்.




போகப் போகத் தெரியும் தொடர்கதையின் முன் கதைச் சுறுக்கம்.

    மீனா.... இந்தக் கதையின் நாயகி! ஓர் அனாதைபெண். அவளைக் குழந்தையாக இருக்கும் பொழுது அறிவழகி என்பவள் ஆற்றங்கரையில் கண்டெடுத்து வளர்க்கிறாள்.
    மீனா ஆத்தூர் என்ற ஊரை வழிநடத்திச் செல்லும் சக்திவேல் என்பவனை விரும்புகிறாள். சக்திவேலின் தாய் தன் மகனுக்கு இரத்த சொந்தத்தில் தான் பெண் அமையும் என்று ஜோசியன் சொன்னதால் சொந்தத்தில் பெண் தேடிக் கொண்டிருக்கிறாள். இதற்கு நடுவில் வெற்றிவேல் என்பவனும், அவன் தம்பி வேந்தன் என்பவனும் மீனாவை விரும்புகிறார்கள். வெற்றிவேல் ஊருக்கும் சக்திவேல் ஊருக்கும் தொடக்கத்திலிருந்தே பிரட்சனை இருந்தாலும் புதியதாக வந்து மீனாவால் மேலும் பிரட்சனைத் தொடர்கிறது.

    தற்போது மீனாவைச் சக்திவேல் வீட்டில் அடைக்கலமாக இருக்கிறாள். சக்திவேலின் தாய் அகிலாண்டேசுவரி இவளை வெறுக்கும் காரணம் தெரியாமலும் சக்திவேலின் புத்தகத்திலிருந்து எடுத்த வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் கண்டும் மீனா குழம்பிப் போய் இருக்கிறாள்.

தொடருங்கள்...

2 comments :